தென்னாபிரிக்கா அணியின் சகல துறை ஆட்டக்காரர் கிறிஸ் மோரிஸ் அனைத்து வகையான கிரிக்கட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் தனது இன்ஸ்டங்கிராம் பக்கத்தில் தனது ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கிறிஸ் மோரிஸ் தென்னாபிரிக்காவின் உள்ளுர் அணியான டைடன்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவ்வணியின் பயிற்றுவிப்பாளர் பொறுப்பை ஏற்பதையிட்டு தான் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் கிறிஸ் மோரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு கிரிக்கட்டிற்கு அறிமுகமான கிறிஸ் மோரிஸ் இதுவரை 4 டெஸ்ட், 42 ஒருநாள் மற்றும் 23 டி டுவண்டி சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 459 ஓட்டங்களை பெற்றுள்ளதோடு, 12 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார். ஒரு நாள் போட்டியில் ஆயிரத்து 756 ஓட்டங்களை பெற்றுள்ள அவர் 48 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளதோடு, சர்வதேச டி டுவண்டி போட்டிகளில் 697 ஓட்டங்களை பெற்றுள்ளதோடு, 34 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார். 81 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள கிறிஸ் மோரிஸ் 618 ஓட்டங்களை பெற்றுள்ளார். 95 விக்கட்டுக்களையும் ஐபிஎல் போட்டிகளில் கைப்பற்றியுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்பட்ட வீரர் என்ற பெறுமையும் அவரையே சாரும். கடந்த வருடம் ஐபிஎல் ஏலத்தின் போது 16.25 கோடிக்கு கிறிஸ் மோரிஸை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி கொள்வனவு செய்தமை குறிப்பிடத்தக்கது.