தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஒழுங்கு செய்த 42 ஆவது தேசிய விருது வழங்கும் நிகழ்வு கொழும்பு தாமரை தடாக அரங்கில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.
நாடகம் , பாடல் , நடனம் உள்ளிட்ட 45 பிரிவுகளிள் 150 க்கும் கூடுதலான படைப்பாளர்கள் விருதுகளை பெற்றுக்கொண்டனர். விசேட தேவையுடைய இளைஞர் யுவதிகளுக்காக நடாத்தபட்ட போட்டிகளில் வெற்றியீட்டியோருக்கு விருதுகளும் பணப்பரிசில்களும் வழங்கப்பட்டன.
9 ஆவது இளைஞர் திரைப்பட விழாவில் 13 குறுந்திரைப்படங்களுக்கும் 8 வர்ணனை திரைப்படங்களுக்கும் இதன்போது விருதுகள் விழங்கப்பட்டன. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இணையத்தளமும் செல்லிடத்தொலைபேசி செயலியும் இதன்போது வெளியிட்டுவைக்கப்பட்டன.