பொலிஸாருக்கு இடையூறு விளைவித்த குற்றசாட்டில் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கடந்த ஒக்டோபர் மாதம் 4ம் திகதி தர்மபுரம் பகுதியில் இடம்பெற்றது. இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை தடுக்க சென்ற பொலிஸாரை சந்தேக நபர்கள் தாக்கியுள்ளனர்.
இதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளுக்கமைய இன்றைய தினம் ராஜகிரிய பகுதியில் சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு பேர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அவர்கள் நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர்.