சுவீடனின் முதலாவது பெண் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட மக்டலினா என்டசன் தமது கடமைகளை ஆரம்பித்து ஒரு மணித்தியாலத்தின் பின்னர் தனது பதவியை இராஜினமா செய்துள்ளார். எவ்வாறெனினும் எதிர்காலத்தில் தனி கட்சியினூடாக போட்டியிட்டு அந்நாட்டு பிரதமராக வர எதிர்பார்ப்பதாக மக்டலினா என்டசன் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை கூட்டு அரசாங்கமொன்றின் தலைமத்துவத்தை ஏற்க வேண்டியதன் யதார்த்தத்துக்கு மத்தியல் இத்தீர்மானத்தை எடுத்ததாக அவர் குறிப்பிட்டார். அதேபோல் சுவீடன் பாராளுமன்றத்தில் அவர் சமர்ப்பித்திருந்த வரவு செலவு திட்டம் தோல்வியடைந்தமையும் அவரின் இத்தீர்மானத்திற்கு காரணமாகும்.
அவரின் கட்சியின் இந்த வரவு செலவு திட்டத்தில் வாக்களிக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. இந்த வரவு செலவு திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர்கள் தெரிவித்துள்ளனர்.