இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 12 அணிகளுக்குள் இலங்கை அணி நேற்று இடம்பிடித்தது. அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியை வெற்றிகொண்டதன் ஊடாக இலங்கை அணி இவ் வாய்ப்பை பெற்றுக்கொண்டது.
20 – 20 உலக கிண்ண கிரிக்கெட் தொரின் முதல் சுற்றின் சுப்பர் 12 அணிகளில் இலங்கை அணி இணைந்துள்ளது. அபுதாபியில் நேற்று இடம்பெற்ற அயர்லாந்து அணிக்கெதிரான போட்டியில் 70 ஓட்டங்களால் வெற்றிகொண்டதன் ஊடாக இவ் வாய்ப்பு கிடைத்தது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களை குவித்தது. மிகச் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய வணிந்து ஹசரங்க 47 பந்துகளில் 71 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பத்தும் நிஷங்க 61 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதோடு இவர்கள் இருவரும் 4 வது விக்கெட்டுக்காக 123 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். 172 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய அயர்லாந்து அணி 18.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 101 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
அவ் அணி சார்பாக என்ட் பேல்பெர்னி 41 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இலங்கை அணியின் பந்து வீச்சில் மஹீஷ் தீக்சன 3 விக்கெட்டுக்களையும் லஹிரு குமார மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக வணிந்து ஹசரங்க தெரிவானார்.