விளையாட்டு துறையினூடாக சர்வதேசத்தை வெற்றிக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு உள்ளிட்ட சகல நிறுவனங்களும் தயார் நிலையிலுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற உலகிண்ண சக்கரநாட்காலி டெனிஸ் போட்டியில் 6ம் இடத்தைபெற்றுக்கொண்ட இலங்கை வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்ட போதே அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
16 நாடுகளின் பங்கேற்புடன் போட்டித்தொடர் இத்தாலியில் இடம்பெற்றது. போட்டியில் வெற்றியீட்டிய வீர வீராங்கணைகளுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாவும், பயிற்றுவிப்பாளர்களுக்கு தலா 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டது.
வீரர்களை தைரியமூட்டும் செயற்பாடு முன்னெடுக்கப்படுவதோடு, சகல விளையாட்டு துறைகளிலும் இலங்கை முன்னோக்கி பயணிப்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். நீண்டகால செயற்பாட்டின் ஆரம்பம் மாத்திரே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ச்சியாக அது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.