தியவன்னா ஓயாவில் காணப்பட்ட எண்ணெய்படலம் தொடர்பான விசாரணை அறிக்கை அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிக்கப்பட்டது. தியவன்னா ஓயாவில் படிந்திருந்த எண்ணெய் படலம் தொடர்பான புகைப்படங்கள் சிலவும் அமைச்சரிடமும் கையளிக்கப்பட்டிருந்தன. அதுதொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயத்திற்கு அமைச்சர் பணிபுரை விடுத்திருந்தார். அதற்கமைய ஆய்வுகளுக்கென விசேட குழு ஒன்றும் நியமிக்கபட்டிருந்தது.
குறித்த பகுதியில் கிடைக்கப்பெற்ற நீர்மாதிரிகள் ஆய்வுகளுக்குட்படுத்தப்பட்ட நிலையில் அதுதொடர்பான அறிக்கை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தியவன்னா ஓயாவுக்கு நீர் வழங்கம் புத்கமுவ கால்வாயில் கழிவுகள் உரிய முறையில் அகற்றப்படாமையினால் வடிகாலமைப்பு நடவடிக்கையில் பாதிப்பு ஏற்பட்டுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அதன் காரணமாக பக்ற்றீரியா மற்றும் பாசிகளின் வளர்ச்சியால் குறித்த நிலை ஏற்பட்டுள்ளதாக ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.