நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றாளர்களாக ஆயிரத்து 518 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதனடிப்படையில் நாட்டின் மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 6 ஆயிரத்து 9 ஆக உயர்வடைந்துள்ளது.
குறித்த எண்ணிக்கையில் 4 இலட்சத்து 33 ஆயிரத்து 93 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக புள்ளிவிபர தரவுகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்தும் 60 ஆயிரத்து 698 பேர் தொற்றாளர்களாக சிகிச்சைப்பெற்று வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், 93 கொரோனா மரணங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. நேற்று முன்தினம் உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்களே நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டன.
குறித்த எண்ணிக்கையுடன் நாட்டில் கொவிட் – 19 வைரஸ் தாக்கத்தினால் பதிவாகியுள்ள மொத்த மரணங்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 218 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட 93 கொவிட் மரணங்களில் 48 பெண்களும், 45 ஆண்களும் உள்ளடங்குவதாக சுகாதார பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.