பாகிஸ்தானில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளனர். கைபர் பக்துன்குவா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதனால் பல பகுதிகள் வெள்ளத்தில் முழ்கியுள்ளன. சில பகுதிகளில் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்குண்டு 11 பேர் உயிரிழந்துள்ளனர். பல வீடுகள் சேதமடைந்துள்ளன.
தற்போது நிலவும் சீரற்ற வானிலை தொடர்ந்தும் சில நாட்களுக்கு நீடிக்குமென பாகிஸ்தான் வானிலை மையம் எதிர்வுகூறியுள்ளது. கராச்சி உட்பட சிந்த் மாகாணத்தின் பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்யுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்கப்படுவதாக பாகிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன.