நாட்டில் அனைத்து மாணவர்களும் பயன் பெறக்கூடியவகையில் கல்விக்கான தேசிய வானொலி அலைவரிசையொன்று (island – wide radio education channel) அரம்பிக்கப்படவுள்ளது.
கொவிட் 19 தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு மாணவர்களின் கல்வியில் கவனம் செலுத்தி இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டதில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
07. ஆரம்ப நிலை, இரண்டாம் நிலை, உயர் கல்வி மற்றும் மூன்றாம் நிலைக் கல்விக்கான தேசிய வானொலி அலைவரிசையொன்றை ஆரம்பித்தல்
கொவிட் – 19 தொற்று நிலைமையில் ஏற்பட்ட சமூக இடைவெளி காரணமாக கல்வியில் தோன்றியுள்ள ஏற்றத்தாழ்வுகளுக்கு தீர்வு காணும் வகையில் நாடளாவிய ரீதியில் வீச்சுக் கொண்ட வானொலிக் கல்வி அலைவரிசையை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சும் வெகுசன ஊடக அமைச்சும் இணைந்து திட்டமிட்டுள்ளது. அதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளைப் பூர்த்தி செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் எடுப்பதால், கல்வி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட வானொலி அலைவரிசையை துரிதமாக ஆரம்பிப்பதற்கு இயலுமான வரை தற்போது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான அலைவரிசைகளில் நாடளாவிய ரீதியான வீச்சுக் கொண்ட அலைவரிசையை கல்வி நிகழ்ச்சித்திட்டங்களை ஒலிபரப்புக்குப் பயன்படுத்துவதற்காக கல்வி அமைச்சரும் வெகுசன ஊடக அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.