நேற்றைய தினம் இரண்டாயிரத்து 460 தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் இரண்டாயிரத்து 455 பேர் புதுவருட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களெவும், 5 பேர் வெளிநாட்டவர்களெனவும் தெரியவந்துள்ளது. நாட்டில் இதுவரை மூன்று இலட்சத்து 6 ஆயிரத்து 662 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரண்டு இலட்சத்து 75 ஆயிரத்து 212 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர். தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் 27 ஆயிரத்து 126 பேர் சிகிச்சைப்பெறுவதுடன், 4 ஆயிரத்து 380 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. நேற்றைய தினம் 12 ஆயிரத்து 578 பீசீஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.