சிறுவர்களின் பாலியல் சார்ந்த காணொளிகளை இணையத்தளத்தில் வெளியிடும் சம்பவம் தொடர்பில் கண்டி பிரதேசத்தில் நபர் ஒருவர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இவ்வாறான நூற்றுக்கும் அதிகமான காணொளிகள் உட்பட புகைப்படங்கள் பலவற்றை இணையத்தளத்தில் பதிவேற்றியுள்ளதாக பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. 3 நாட்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள் ஊடாக இந்த நபர் தொடர்பில் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
“நாட்டின் எந்தவொரு பிரதேசத்தில் இருந்தும் தொழிநுட்பங்களை பயன்படுத்தி இவ்வாறான காணொளிகளை இணையத்தில் பதிவேற்றும் நபர்களை பொலிசாரால் கண்டறியமுடியும். அது தொடர்பில் 3 நாட்களுக்கு முன்னர் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதற்கு சிறுவர் மற்றும் மகளிர் அலுவலகத்தின் ஒத்துழைப்பு பெறப்பட்டது. இதன்போது கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் இவ்வாறு புகைப்படங்கள் மற்றும் காணொளி;களை இணையத்தில் பதிவேற்றி வந்தமை கண்டறியப்பட்டது. தொடர்ச்சியாக அவர் இந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வந்துள்ளார். கடந்த 4 நாட்களில் மாத்திரம் இத்தகைய காணொளிகளை பதிவேற்றும் பல்வேறு நபர்கள் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது. அவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதுடன் அவர்கள் பயன்படுத்தும் பல்வேறு விதமான இலத்திரனியல் உபகரணங்கள் வழக்கு சார்ந்த பொருட்களாக அடையாளப்படுத்தப்படும். இதற்கு மேலதிகமாக இந்த வீடியோக்கள் புகைப்படங்களை ஏனைய நபர்களுக்கு பகிர்வர்கள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.”