நேற்றைய தினம் நாட்டில் மொத்தமாக 1,940 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் (28) இனங்காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களில் அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகி உள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 596 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகி இருந்தனர். அத்துடன் களுத்துறை மாவட்டத்தில் 382 பேரும் மற்றும் யாழ். மாவட்டத்தில் 122 பேரும் தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர்.

நேற்றைய தினம் நாட்டில் மொத்தமாக 1,940 கொவிட் தொற்றாளர்கள் பதிவு
படிக்க 0 நிமிடங்கள்