5 இலட்சம் ரூபா பெறுமதியான ஒருதொகை பலாமர குற்றிகள் புலத்சிங்கள பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றை சட்டவிரோதமாக கொண்டுசெல்ல முயற்சித்த சந்தர்ப்பத்திலேயே மரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த லொறியொன்றை பொலிஸார் சோதனையிட்டபோது, அனுமதிப்பத்திரமின்றி மரக்குற்றிகள் எடுத்துச்செல்லப்பட்டமை தெரியவந்தது.
சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட மத்திய நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. கம்பஹா பெம்முல்ல பொலிஸார் நடத்திய தேடுதல் நடவடிக்கையினூடாக 24 பியர் டின்கள், 55 மதுபான போத்தல்களுடன் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.