வெயாங்கொடை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் ஒருவர் போலி ஆவணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் இலங்கை பெண்களுக்கென அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் வைத்தே வெயாங்கொடை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டார். இவர் போலியான பெயரில் வெளிநாடு சென்றுள்ளதோடு, போலி அடையாள அட்டை, போலி கடவுச்சீட்டு ஆகியவற்றை பயன்படுத்தி அவர் வெளிநாடு சென்றுள்ளார்.
2001ஆம் ஆண்டு பிறந்துள்ள குறித்த பெண் 1983ஆம் ஆண்டு பிறந்துள்ளதாக போலி ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. அவர் முல்லைத்தீவு பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் உள்ளவர்களின் தகவல்களை பெறும்போது இப்பெண் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சந்தேகத்த்திற்கு இடமான பெண்ணை அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.