நேற்று ஆயிரத்து 517 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதில் 37 பேர் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் ஆவார். நாட்டில் இதுவரை 2 இலட்சத்து 82 ஆயிரத்து 60 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். 23 ஆயிரத்து 528 பேர் சிகிச்சையில் உள்ளனர். 2 இலட்சத்து 54 ஆயிரத்து 871 பேர் பூரண குணமடைந்துள்ளனர். நேற்று முன்தினம் உறுதிசெய்யப்பட்டு நேற்றைய தினம் 41 கொவிட் மரணங்கள் பட்டியிலடப்பட்டன. இதன்மூலம் நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 702 ஆக அதிகரித்துள்ளது.