சமூக பொதுநலன் எனும் கோட்பாட்டில் இருந்து தனிநபர் உரிமைகளை அகற்ற முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார். சுயாதீன தொலைக்காட்சி சேவையின் துலாவ அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“நாம் கூட்டமாக ஒன்று கூடினால் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என தனிமைப்படுத்தல் கட்டுப்பாட்டில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாடசாலை செல்லாதவர்களுக்கு இதுதெரிந்த விடயம். இவ்வாறான நிலையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் நாட்டின் பல இடங்களில் இருந்து வருகை தந்துள்ளனர். இவ்வாறான சூழலில் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் பொலிஸாருக்கு அறிவிப்பார். தனிமைப்படுத்தல் சட்டத்தை பயன்படுத்தி கருத்து வெளியிடும் சுதந்திரத்தை முடக்க அரசாங்கம் இடமளிக்காது. எனினும் கருத்து வெளியிடும் சுதந்திரத்தை பயன்படுத்தி தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் செயற்பாடுகள் இடம்பெறுவதையும் அனுமதிக்க முடியாது. தனிப்பட்ட உரிமைகளை பொதுநலனில் இருந்து தனியாக பிரிக்க முடியாது. அனைத்து உரிமைகளின் இறுதி இலக்கு சமூக பொதுநலனாகும். ”
[ot-video type=”youtube” url=”https://youtu.be/9ZIchjvwPVo”]