அதிகூடிய கொரோனா தடுப்பூசிகளை நேற்று வழங்க முடிந்தததாக சுகாதார பிரிவு தெரிவிக்கிறது.
நேற்றைய தினம் அதிகூடிய கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதற்கமைய 3 இலட்சத்து 37 ஆயிரத்து 445 பேருக்கு நேற்று தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக சுகாதார ஊக்குவிப்பு பணியகம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் சைனோபாம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 2 இலட்;சத்து 89 ஆயிரத்து 122 பேருக்கும். அதன் இரண்டாவது டோஸ் 32 ஆயிரத்து 385 பேருக்கும் வழங்;கப்பட்டுள்ளது. ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் முதலாவது டோஸ் 15 ஆயிரத்து 222 பேருக்கும் பைசர் தடுப்பூசிகள் 700 பேருக்கும் கொவிசீல்ட் தடுப்பூசிகள் 36 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் பணிகளும் இன்று இடம்பெறுகின்றன. பத்தரமுல்ல, தியத்தஉயன வளாகத்தில் இராணுவத்தின் பங்கேற்றலுடன் சைனோபாம் தடுப்பூசிகள் இன்று வழங்கப்படுகின்றன. நேற்றைய தினத்தில் மாத்திரம் இவ் வளாகத்தில் 4 ஆயிரத்து 676 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் கடந்த 5 ம் திகதி முதல் இதுவரையில் 48 ஆயிரத்து 224 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட 5 வைத்தியசாலைகளுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை மட்டக்களப்பு நலிவுற்றோர் அபிவிருத்தி சங்கம்-ஐக்கிய இராச்சியம் மற்றும் வடக்கு கிழக்கு மாகாண புற்றுநோய் உதவி சங்கம் ஆகிய அமைப்புக்கள் இணைந்து வழங்கியுள்ளன.
நாவற்காடு , கரடியனாறு, வாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி ஆகிய கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கே இவை வழங்கப்பட்டன. இவற்றின் பெறுமதி 12 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவாகும். மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் நாகலிங்கம் மயூரன் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்துகொண்டனர்.
அத்துடன் அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி மயூரி ஜனன் தலைமையிலும் உயிர்காப்பு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. கொவிட் சிகிச்சை அளிக்கும் 6 வைத்தியசாலைகளுக்கு 45 ஒக்சிஜன் சிலிண்டர்களும் 48 ரெகுலேட்டர்களும் வழங்கி வைக்கப்பட்டன. இவற்றின் பெறுமதி 7.7 மில்லியன் ரூபாவாகும். கிழக்கு மாகாண ஆளுனர் அநுராத யஹம்பத்தினால் இவை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டன.