ஓளடத ஓழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யாமல் மேலதிக உணவாக பெயரிடப்பட்டு மருந்தகங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பல்வேறுப்பட்ட ஒளடதங்களை விற்பனையில் இருந்து ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஓளடத ஓழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ள ஓளடதங்களின் பெயர்களில் விட்டமின் டி மற்றும் 19 வகையான தடுப்பூசிகளை மருந்தகங்களில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது, அம்பலமாகியுள்ளது. மருந்தக உரிமையாளர்களை அறிவுறுத்தி அந்த மருந்துகளை விற்பனையில் இருந்து ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர். இந்த மருந்துகளை பெற்றுக்கொள்வதன் மூலம் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகக்கூடிய அச்சுறுத்தல் காணப்படுகிறது.