போலி காசோலைகளை சமர்ப்பித்து தனியார் நிறுவனமொன்றிலிருந்து சுமார் 430 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட மற்றுமொரு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார்.
நாட்டில் பிரதானமாக உருக்கு கம்பிகளை தயாரிக்கின்ற நிறுவனமொன்றின் வங்கிக் கணக்கிலிருந்து போலி காசோலைகளை சமர்ப்பித்து கடந்த ஏப்ரல் 12 ம் திகதி நிதி பெறப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக 6 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மற்றுமொரு சந்தேக நபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் வணிக மற்றும் நிதி குற்றத்தடுப்பு பிரிவினால் நேற்று கைதுசெய்யப்பட்டார். இவர் எம்பிலிப்பிட்டி புதிய நகரை வசிப்பிடமாக கொண்டவர் இச்சந்தேக நபர் கிரிபத்கொட பகுதியிலுள்ள வங்கியொன்றிலிருந்து 130 இலட்சம் ரூபாவிற்கான காசோலையையும் பரிமாற்றியுள்ளார்.