இலங்கை அணிக்கு எதிரான முதலாவது 20-டுவண்டி போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டி நேற்றிரவு காடிப்பில் இடம்பெற்றது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 129 ஓட்டங்களை பெற்றது. தசுன் சானக்க 50 ஓட்டங்களையும் அணித்தலைவர் குசல் ஜனித் பேரேரா 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் சேம் குரன் மற்றும் அடில் ரஷீட் ஆகியோர் தலா இவ்விரு விக்கட்டுக்களை கைப்பற்றினர். அதற்கமைய 130 எனும் இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 17.1 ஓவர்களில் 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி பெற்றது. ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்களையும், ஜேசன் ரோய் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். போட்டியின் ஆட்டநாயகனாக ஜோஸ் பட்லர் தெரிவானார். இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது 20-டுவண்டி போட்டி இன்று இரவு 11 மணிக்கு இடம்பெறவுள்ளது.