கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக சீனா அந்நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை ஒரு பில்லியனை தாண்டியுள்ளதென அந்நாட்டு சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.
முதலாவது டோஸ் பெறப்பட்டு 35 நாட்கள் செல்வதற்குள் இரண்டாவது டோஸை பெற்றுக்கொள்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வூஹான் மாநிலத்தில் வசித்து வரும் 18 வயதிலும் கூடிய அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்க சுகாதார பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
இம்மாநிலத்தில் இதுவரை 8.2 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. குவன்சூ மாநிலத்தில் 5.9 மில்லியன் பேருக்கு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் வழங்கப்பட்டுள்ளதுடன் 4.8 மில்ல்pயன் பேருக்கு முதலாவது டோஸ் மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.