கடந்த பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் ஆசனத்திற்கு கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பெயரை தேர்தல் ஆணைக்குழுவிடம் இன்று வழங்கியது.
கடந்தாண்டு இடம்பெற்ற பொதுதேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி படுதோல்வியடைந்தது. 1977 ஆம்ஆண்டுமுதல் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ரணில் விக்ரமசிங்கவும்இத்தேர்தலில் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய தேசிய கட்சிக்கு இத்தேர்தலில் எந்தவொரு மாவட்டத்திலும் எந்தவொரு ஆசனமும் கிடைக்கவில்லை. தேசிய பட்டியல் மூலம் ஒரு உறுப்பினர் மாத்திரமே கிடைத்தது. 9 மாதங்களுக்கு கூடுதலான காலம் வெற்றிpடமாக காணப்பட்ட இவ்வாசனத்திற்காக கடந்;த மாதம் 31 ஆம் திகதி இடம்பெற்ற அதி உயர்பீட செயற்குழு கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய ரணில் விக்ரமசிங்கவின் பெயரை தேர்தல் ஆணைக்குழுவிடம் வழங்க கட்சிய்pன் பொதுச் செயலாளரும் முன்னாள் ;பாராளுமன்ற உறுப்பினருமான பாலித்த ரங்கேபண்டார நடவடிக்கைஎடுத்தார்.