தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 57 பேர் கைதுசெய்யப்பட்டனர். இன்றைய தினமும் நாட்டில் சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொழும்புக்குள் உள்நுழையும் வாகனங்களை சோதனையிடும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார். பயணத்தடை அமுலில் உள்ள தற்போதைய காலப்பகுதியில் வாகனங்களில் பயணிப்போர் தொடர்பில் கருத்திற்கொண்டு பொலிஸாரினால் ஸ்டிக்கர்களை வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்தது. குறித்த வேலைத்திட்டம் தற்போது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.