கொவிட் தடுப்பூசி ஏற்றபடும் வேலைத்திட்டம் இன்றைய தினமும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது கெவிஷீல்ட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 9 இலட்சத்து 25 ஆயிரத்து 242 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன் 2வது டோஸ் 3 இலட்சத்து 48 ஆயிரத்து 582 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. சைனோபாம் மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளும் வெற்றிகரமாக வழங்கப்படுகின்றன. யாழ் மாவட்டத்தில் கொவிட் தடுப்பூசிகளை பரந்தளவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்தார்.
தடுப்பூசி வழங்கும் மையங்கள் சிலவற்றிற்கும் அமைச்சர் நேரடி கள ஆய்வை மேற்கொண்டார். யாழ் மாவட்டத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் 11 இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுவருகின்றன. நாளை முதல் தடுப்பூசி ஏற்றும் நிலையங்களின் எண்ணிக்கை மும்மடங்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.