நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 80 ஆயிரத்து 277 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் ச்சன்ன ஜயசுமன தெரிவித்தார். அவர்களில் 3 ஆயிரத்து 335 பேருக்கு ரஷ்யாவின் ஸ்புட்னிக் வீ தடுப்பூசியும் 76 ஆயிரத்து 942 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசியும் ஏற்றப்பட்டுள்ளது. அத்துடன் 10 ஆயிரத்து 180 பேருக்கு கொவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று ஏற்ப்பட்டது. அதனடிப்படையில் இதுவரை 2 இலட்சத்து 31 ஆயிரத்து 551 பேருக்கு கொவிஷீல்ட தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் ஏற்றப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் தடுப்பூசி ஏற்றப்பட வேண்டிய அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசியை வழங்க எதிர்பார்த்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்த்ர சில்வா தெரிவித்தார். தேவையான தடுப்பூசிகளை வெளிநாடுகளிலிருந்து கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. 13 மில்லியன் ஸ்புட்னிக் வீ தடுப்பூசியை இலங்கை அரசாங்கம் ரஷ்யாவிடமிருந்து பெற்றுக்கொள்ளவுள்ளது. இதுவரை 6 இலட்சம் தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் சில தினங்களில் 9 இலட்சம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளன. அத்துடன் ஜூன் மாதம் இறுதியில் அல்லது ஜூலை மாதத்தின் ஆரம்பத்தில் 9 இலட்சம் தடுப்பூசிகள் பெற்றுக்கொள்ளப்படும். தடுப்பூசி வழங்கவேண்டும் அனைவருக்கும் கட்டாயம் தடுப்பூசி ஏற்றப்படவேண்டும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்த்ர சில்வா குறிப்பிட்டார்.