அனுராதபுரம் தனியார் வங்கியொன்றில் இன்று காலை இடம்பெறவிருந்த கொள்ளை சம்பவமொன்றை வங்கி பாதுகாப்பு அதிகாரிகள் முறியடித்துள்ளனர். அனுராதபுரம் புதிய நகரில் உள்ள குறித்த வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணத்தை வைப்பிடுவதற்கென வங்கி பாதுகாப்பு அதிகாரிகள் இன்று காலை அங்கு வருகை தந்துள்ளனர். குறித்த சந்தர்ப்பத்தில் மோட்டார் சைக்கிளிலில் வருகை தந்த இருவர் அதிகாரிகள் மீது மிளகாய் தூளை வீசி பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர்.
எனினும் வங்கி பாதுகாப்பு அதிகாரிகளின் பொறுப்பு வாயந்த செயற்பாடினூடாக குறித்த முயற்சி தோற்கடிக்கப்பட்டது. இதன்போது அதிகாரிகளின் துப்பாக்கியை கொள்ளையர்கள் எடுத்துச்சென்ற நிலையில், துப்பாக்கி பிரயோகத்தையும் நடத்தியுள்ளனர். சம்பவத்தில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ள நிலையில், கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவரும் காயமடைந்திருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.