ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமின் இனவாத சொற்பொழிவுகளை ஒழுங்கு செய்து அதில் கலந்துகொண்ட ஒரு சில சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். குளியாப்பிட்டிய பகுதியிலேயே இவ்வாறான சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
“2018 ம் ஆண்டில் நாட்டின் பல பாகங்களிலும் இனவாதத்துடன் தொடர்புபட்ட வகுப்புக்கள் நடாத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளன. அவ்வாறான வகுப்புக்களில் கலந்துகொண்டும் அவற்றை ஒழுங்கு செய்த பல நபர்கள் பயங்கரவாத ஒழிப்பு பிரிவினரால் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய நேற்று குளியாப்பிட்டிய கெக்குணுகொல்ல பகுதியில் சஹ்ரான் ஹாசிமின் ஆதாரவாளர்களினால் நாடாத்தப்பட்ட வகுப்புக்களில் கலந்துகொண்ட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் 40 , 52 , 55 வயதுகளை உடையவர்கள். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இம்மூன்று பேரும் பயங்கரவாத ஒழிப்பு பிரிவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். பயங்கரவாததத்தை ஒழிக்கும் சட்டமூலத்தின் கீழ் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டு தொடர்ந்தும் விசாரிக்கப்படவுள்ளனர். நேற்றைய தினம் மற்றுமொரு நபர் வவுனியாவில் வைத்து பயங்கரவாத ஒழிப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் சுமார் 42 வயது மதிக்கத் தக்கவர். உயிரிழந்த எல்.ரி.ரி.ஈ அங்கத்தவரின் பெயரிலான அடையாள அட்டை, அதேபோன்று போலி கடவுச்சீட்டுக்களை தயாரித்து நபர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக தகவல்கள் தெரியவந்துள்ளன. இது தொடர்பாகவே இவர் கைதுசெய்யப்பட்டார். இவரும் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறார்.”