கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாத இறுதி வாரத்தில் வெளியிடப்படுமென பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
உயர்தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் பெறுபேறுகள் மீளாய்வு செய்யப்படுகின்றன. இதற்கமைய இம்மாத இறுதிக்குள் சகல பெறுபேறுகளையும் வெளியிடமுடியுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சகல சுகாதார பரிந்துரைகளுக்கும் அமைய நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளினதும் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நேற்று ஆரம்பமாகின. ஆகஸ்ட் மாத பாடசாலை விடுமுறை ஒரு வாரத்திற்கு வரையறுக்கப்படுமென அமைச்சர் பேராசாரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் சகல பல்கலைக்கழகங்களினதும் கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் 27 ம் திகதி ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.