பெண்ணொருவர் உடல் அழகு மட்டுமன்றி உளரீதியான அழகிலும் மேம்பட்டால் மட்டுமே அழகுராணியாக முடியும். இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி திருமதி அழகுராணி தனது கிரீடத்திற்கு இழுக்கை ஏற்படுத்தினால் அது நாட்டிற்கும் ஓர் அவப்பெயராகும்.
உலக திருமதி அழகுராணி போட்டியில் வெற்றியீட்டிய கரோலினா ஜூரி அண்மையில் செயற்பட்ட விதத்தினால் அவர் பொவிசாரை நாடவேண்டி ஏற்பட்டது. பின்னர் அவருக்கு பொலிஸ் பிணை வழங்கப்பட்டது. எதிர்வரும் 19 ம் திகதி நீதிமன்றத்த்pல் ஆஜராக வேண்டுமென பொலிசார் உத்தரவிட்டனர்.
இலங்கை திருமதி அழகுராணியைத் தேர்ந்தெடுக்கும் போட்டி தாமரை தடாகம் கலையரங்கில் இடம்பெற்றது. அங்கு புஷ்பிகா டி சில்வா திருமதி அழகுராணியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். உடன் அவரது கிரீடம் பறிக்கப்பட்டு இரண்டாம் இடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு அது அணிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு உலக திருமதி அழகுராணியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கரோலினா ஜுரி மற்றும் ஒப்பனைக் கலைஞர் ச்சுலா பத்மேந்திர ஆகியோர் இந்த கீரிடத்தை பறித்தனர். புஸ்பிகா டி சில்வா தனது கணவரை விட்டு பிரிந்திருப்பதாக கூறி அது பறிக்கப்பட்டது. அப்போது மேடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. தான் கணவரை விட்டு இருந்து பிள்ளையுடன் வாழ்ந்த போதிலும் கணவரை விடுவிக்கவில்லையெனத் தெரிவித்தார்.
பின்னர் போட்டியை ஏற்பாடு செய்தகவர்கள் நடத்திய வைபவமொன்றில் புஷ்பிகா டி சில்வாவுக்கு மீண்டும் அந்த கிரீடம் வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் கரோலினா ஜுலி மற்றும் ச்சுலா பத்மேந்திர ஆகியோர் கறுவாத்தோட்ட பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டனர்.