புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களுக்கு வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கென ஆசன ஒதுக்கீடுகளை முன்கூட்டியே பதிவுசெய்வதற்கான வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதாக ஷிசி வெல்கம தெரிவித்தார். புத்தாண்டு காலப்பகுதியில் அதிகளவான மக்கள் கொழும்பிலிருந்து வெளிமாகாணங்களுக்கு செல்வர் இவ்வாறு சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களின் நலன் கருதி தெரிவுசெய்யப்பட்ட நகரங்களுக்கான விசேட பஸ் சேவை நாளை முதல் எதிர்வரும் 12ம் திகதி வரை முன்னெடுக்கப்படுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கமைய புற்கோட்டை பெஸ்டியன் மாவத்தை வளாகத்திலிருந்து சேவை முன்னெடுக்கப்படும். உரிய பஸ் சேவைகள் தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் ஆசனங்களை ஒதுக்கிக்கொள்வது தொடர்பில் றறற.வெஉடிழழமiபெ.டம எனும் இணையத்ளத்தின் ஊடாக அல்லது மை பஸ் – ளட கையடக்க தொலைபேசி குறிக்காட்டியினூடாக அறிந்துக்கொள்ள முடியும். அத்துடன் பெஸ்டியன் மாவத்தையிலுள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழு காரியாலயத்திற்கு வருகை தந்தும் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியுமென அதன் தலைவர் ஷசி வெல்கம தெரிவித்தார். புத்தாண்டை முன்னிட்டு விசேட ரயில் சேவைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புகையிரம பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.