இலங்கை கிரிக்கட் நிறைவேற்றுக்குழுவின் முன்னாள் உறுப்பினர்களின் தவறுகள் இருந்தால் உடன் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோப் குழு விளையாட்டுத்துறை அமைச்சரின் செயலாளருக்கு அறிவித்துள்ளது. அதற்கு சட்டமா அதிபரின் உதவியை பெற்றுக்கொள்ள முடியுமென கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ச்சரித்தஹேரத் தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் 2017 – 2018 நிதி ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கையும் அதன் தற்போதய செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்கு கோப்குழு கூடியது. இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட 162 ஊழியர்களுள் 123 பேர் ஒப்பந்த அடிப்படையில் உள்ளவர்கள் என்பதனால் அது பாரிய பிரச்சினையாகுமென கோப்குழு சுட்டிக்காட்டியுள்ளது. நிதித்துறை தலைவர் , சட்ட அதிகாரி, தகவல் தொழிநுட்ப உத்தியோகத்தர், உள்ளக கணக்காளர் ஆகிய பதவிகள் நிரந்ததர பதிவகளாக அமையவேண்டுமென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் செயற்பாடுகள் முறையற்ற வகையில் காணப்படுவதனால் அதனை முறையான வகையில் முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டுமென கோப்குழு பரிந்துரைத்துள்ளது.
விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயக்கத்தின் தலையீடு இதனைவிட கூடுதலாக அமையவேண்டும். விளையாட்டு சங்கங்களுக்கு நிதி வழங்குவதற்காக முறையான விண்ணப்பங்கள் தயாரிக்கப்பட வேண்டும். விளையாட்டுத்துறை சட்டத்தை உடன் சீர்திருத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கும் அறிவிக்க கோப்குழு பரிந்துரைத்துள்ளது. 2018 தென்னாபிரிக்க இலங்கை கிரிக்கட் சுற்றுலா தொடர்பான அனுசரணை உரிமைக்காக கிடைக்க வேண்டிய 29 மில்லியன் ரூபா தொகையை இதுவரை அறவிடாமை தொடர்பாக கோப்குழு கேள்வி எழுப்பியுள்ளது. ரகசிய பொலிசார் இதுதொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஸ்லி தி சில்வா தெரிவித்துள்ளார். இதன் அறிக்கையை 3 மாதங்களுக்குள் செயற்குழுவில் சமர்பிக்கவேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அந்த பணம் டயமண்ட் சனல் எனும் அமெரிக்க பிரஜை கணக்கில் வைப்பிலடப்பட்டுள்ளதாகவும் அது எவ்வாறு அப்படி அமைந்தது தொடர்பாகவும் விசாரணைகளின் போது கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ச்சந்திக்க அதுலுசிங்கவை இலங்கை கிரிக்கட் பிரதம பயிற்றுவிப்பாளராக இணைத்துக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் குறைபாடுகள் காணப்பட்டமையினால் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இதுவரை 30 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 2019 ம் ஆண்டு நிதி கூற்றுக்களில் காணப்பட்ட தவறுகள் காரணமாக 2020 கணக்கில் அந்த தொகை இரத்து செய்யப்பட்டமை குறித்து கோப்குழு கிரிக்கட் நிறுவனத்தை சாடியுள்ளது. இதற்கு பொறுப்புக் கூற வேண்டிய அதிகாரிகளுக்கு எதிராக துரித சட்டநடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
பொலன்னறுவை – ஹிங்குரகொட பகுதியில் கிரிக்கட் மைதானமொன்றையும் பல்தொகுதி விளையாட்டு சங்கமொன்றையும் அமைப்பதற்கு 132 மில்லியன் ரூபா செலவிடப்பட்ட போதிலும் அதற்கான உரிமைச் சான்றிதழ் இதுவரை பெற்றுக்கொள்ளப்படாமை தொடர்பாக செயற்குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. 2014 ம் ஆண்டு முதல் 2017 ம் ஆண்டு வரை செலுத்த வேண்டிய 69 கடன் கணக்குகள் 2020 நிதி கூற்றிலிருந்து அகற்றப்பட்டுள்ளமை தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.