திருகோணமலை – மாவிலாரு பகுதியில் இளைஞரொருவர் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளார். மாவிலாரு வாய்க்காலில் நீராடச் சென்ற நபர் ஒருவரே இவ்வாறு நீரில் முழ்கி உயிரிழந்துள்ளதாக சேறுநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர். சேறுநுவர பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பகுதியில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்டிருந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் பேராதனை முர்த்தலாவ பேரகொள்ள பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் எனத் தெரியவந்துள்ளது.
சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சட்டவைத்தியர் பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். சம்பவம் தொடர்பில் சேறுநுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.