இந்தியாவின் தமிழ் நாட்டின் சட்ட சபைத் தேர்தல் இன்று காலை ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறும் இத்தேர்தலில் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 88 ஆயிரத்து 937 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தின் மிக முக்கிய தலைவர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகிய இருவரும் இல்லாத நிலையில் நடைபெறும் இத்தேர்தல் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.