சீன அரசாங்கத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒரு தொகை கொரோனா தடுப்பூசிகளை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ விமான நிலையத்தில் வைத்து பொறுப்பேற்றுக்கொண்டார்.
6 இலட்சம் டோஸ் தடுப்பூசிகளுடன் ஸ்ரீ லங்கன் விமானமொன்று இன்று முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இலங்கைக்கான சீனத் தூதுவர் செங்ஹோன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இத்தடுப்பூசிகளை கையளித்தார். தூதுவரும் ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ச்சன்ன ஜயசுமணவும் இவ் ஆவணங்களில் கைச்சாத்திட்டனர்.
தலைநகர் பீஜிங்கிலுள்ள தேசிய பயடெக் கம்பனி செனே பாம் கொவிட் தடுப்பூசிகளை தயாரித்துள்ளது. இத்தடுப்பூசிகள் இலங்கையிலுள்ள சீனப் பிரஜைகளுக்கு எதிர்வரும் திங்கட் கிழமை வழங்கப்படும். இலங்கையர்களுக்கு விசேட நிபணத்துவ குழுவொன்று ஆராய்ந்ததன் பின்னர் இத்தடுப்பூசிகள் ஏற்றப்படுமென ஒளெடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது. இத்தடுப்பூசி ஏற்றுவது தொடர்பாக தொற்று நோய் மருத்துவ பிரிவின் தலைவர் டொக்டர்; சுதத் சமரவீர கருத்து தெரிவித்தார்.