மேல் மாகாணத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 1120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 47 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 418 பேரும், ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 549 பேரும் கைதானவர்களில் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் அறிவுறுத்தலுக்கமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.