ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்படும் ஸ்புட்னிக் வி கொவிட் 19 தடுப்பூசியை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. 7 மில்லியன் ஸ்புட்னிக் வி தடுப்பூசி கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் அதற்கென 69.65 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்வுள்ளதாக அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனூடாக இலங்கையிலுள்ள 14 மில்லியன் மக்களுக்கு கொவிட் 19 வைரஸிலிருந்து பாதுகாப்பை வழங்க முடியுமென சுகாதார அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இதேவேளை நேற்றைய தினம் ரஷ்ய உற்பத்தியான ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இலங்கையில் அவசர பயன்பாட்டுக்காக பயன்படுத்துவதற்கு தேசிய ஒளடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தற்காலிகமாக இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள செரோமிக் உற்பத்திகளை, 180 நாட்களுக்கான கடன் சலுகையின் அடிப்படையில் இறக்குமதி செய்வதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.