யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் தலையீட்டினால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னைய அரசாங்கத்தினால் நியமனம் வழங்கப்பட்டவர்களின் நியமனங்களை நிரந்தரமாக்குமாறு கோரி இவ்வார்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர்தல் சட்டங்களுக்கு முரணாக அவர்களுக்கு சுகாதார துறையில் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்தியில் சென்ற அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார். 3 பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதியை சந்;திக்க வாய்ப்பு பெற்று தருவதாக அமைச்சர் வழங்கிய வாக்குறுதியை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
இதேநேரம் அங்கு சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவரின் உதவியாளராக கருதப்படும் நபர் ஒருவர் அமைச்சர இவ்வாறு திட்டியுள்ளார். எனினும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் மக்கள் அமைச்சரை திட்டிய நபரை கடுமையாக விமர்சித்தனர். அவரிடம் மன்னிப்பு கோரினர். இதுதொடர்பாக அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக வழங்கிய வாக்குறுதியை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது.
[ot-video type=”youtube” url=”https://youtu.be/azulBmLrLMo”]