ரவி கருணாநாயக்க உள்ளிட்ட மத்திய வங்கி பிணைமுறி சம்பவம் குறித்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களையும் ETI சம்பவத்தின் சந்தேகநபர்களையும் பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்படுவார்கள் என சிறைச்சாலைகள் கட்டுப்பாட்டு பிரிவு ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
“ரவி கருணாநாயக்க் உள்ளிட்ட 8 பேரும் கொழும்பு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தற்போது தனிமைப்படுத்தல் மத்திய நிலையமாக இயங்கி வருகின்ற வெலிக்கட மகளிர் பிரிவில் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். பிசிஆர் பரிசோதனையை அடுத்து இவர்கள் தொற்றாளர்கள் என உறுதி செய்யப்படாத பட்சத்தில் இவர்கள் கொழும்பு சிறைச்சாலையில் வைக்கப்படுவர். பிசிஆர் பரிசோதனைகள் பொசிட்டிவாக இருந்தால் கந்தகாடு தனிமைப்படுத்த்ல் மத்திய நிலையத்திற்கு இவர்கள் அழைத்துச் செல்லப்படுவர். ஈரிஐ நிறுவனத்தின் சந்தேக நபர்களும் வெலிக்கட மகளிர் பிரிவில் இயங்கி வரும் தனிமைப்படுத்தல் நிலையத்திலேயே வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதனையடுத்து மெஹசீன் சிறைச்சாலைக்குஅனுப்பி வைக்கப்படவுள்ளனர். “