பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் ஊடகங்கள் அறிக்கையிடும் போது சம்பந்தப்பட்ட தரப்பிற்கு ஏற்படும் பாதிப்பை தடுப்பதற்கு கட்டுப்பாடுகள் அடங்கிய கொள்கையொன்றை கொண்டுவருவதற்கான காலம் உருவாகியுள்ளதாக ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார். சுயாதீன தொலைக்காட்சியின் ஹத்வெனிபெய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.
“அண்மைக்காலங்களில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பல சம்பவங்களை நாம் பார்த்தோம். பெண்ணொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தால், ஊடகத்தின் ஊடாக அவர் பலமுறை துஷ்பிரயோகப்படுத்தப்படுகிறார். அவ்வாறான நிலைமையே தற்போது உருவாகியுள்ளது. அதிமேதகு ஜனாதிபதியோடு இதுகுறித்து கலந்துரையாடி இவ்விடயத்தில் பிள்ளைகள் மற்றும் பெண்கள் தொடர்பில் ஊடகங்களில் கட்டுப்பாடுகளை கொண்டுவருவது தொடர்பில் கவனத்திற்கு கொண்டுவந்தேன். ஊடகங்கள் ஏன் இவ்வாறு செயற்படுகின்றன.”
[ot-video type=”youtube” url=”https://youtu.be/Z8lxb6HWI_M”]