இந்திய அரசியலிலிருந்து வெளியேறுவதாக ஏ.மு. சசிகலா அறிவித்துள்ளார். ஜெயலலிதா உயிருடன் இருந்த காலப்பகுதியில் அவரது எண்ணத்தை செயற்படுத்தும் சகோதரியாக செயற்பட்டதாகவும் அவரது மறைவின் பின் மக்களின் நலனுக்கென மாத்திரம் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்து ஜெயலலிதா வழிகாட்டிய ஆட்சி நீடிக்க, பிரார்த்திக்கவுள்ளதாக சசிகலா தெரிவித்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் கைதான சசிகலா 4 வருட சிறைதண்டனையின் பின்னர் கடந்த ஜனவரி 27ம் திகதி விடுதலையானார். கடந்த ஒரு மாத காலமாக அரசியலில் ஈடுப்படாமலிருந்த அவர் அரசியல் களத்திலிந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளார்.