இளவரசர் ஹரி அமெரிக்காவில் கடந்த ஒரு வருடமாக வாழ்ந்து வரும் நிலையில் மீண்டும் பிரித்தானியாவிற்கு சென்று வைத்திய சிகிச்சைகளை பெற்றுவரும் இளவரசர் பிலிப்பை பார்வையிடவுள்ளதாக சர்வதே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தனது தாத்தாவான இளவரசர் பிலிப்பின் உடல் நிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால் அரச குடும்பத்தினர் ஹரியை பிரித்தானியாவிற்கு வருகை தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும் குறித்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அவர் பிரித்தானியாவிற்கு செல்வாரா என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. பகிங்ஹம் அரண்ணையில் இளவரசர் பிலிப்பின் உடல்நிலை குறித்து வருத்தத்திற்குரிய தகவல்களை கிடைக்கக்கூடிய வகையில் ஹரி எவ்வாறு கையாளப்பகோகிறார் என்பது குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் கடந்த பெப்ரவரி 16ம் திகதி முதல் இளவரசர் பிலிப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கடந்த முதலாம் திகதி மற்றுமொரு சிறப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதேவேளை எதிர்வரும் ஜூன் 10ம் திகதி அவரது 100வது பிறந்தநாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.