இலங்கை விமானப்படையின் 70வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு 7 ஆயிரத்து 757 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது. 1951ம் ஆண்டு மார்ச் மாதம் 2ம் திகதி ரோயல் ஸ்ரீ லங்கா விமானப்படையென ஆரம்பிக்கப்பட்ட இலங்கை விமானப்படை தற்போது 34 ஆயிரம் வீரர்களையும், 100 விமானங்களையும் கொண்ட விசேட படையணியாக காணப்படுகின்றது. இந்நிலையில் விமானப்படை தளபதியின் ஆலோசனைக்கமைய 467 உயர் நிலை அதிகாரிகளுக்கும், 7 ஆயிரத்து 290 படைவீரர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாக விமானப்படை ஊடகப்பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.