கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ், ஈராக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். பாப்பரசர் ஒருவர் ஈராக்கிற்கு செல்லும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். எதிர்வரும் 5ம் திகதி அவர் ஈராக்கின் பாக்தாத் நகரை சென்றடையவுள்ளதாக வத்திக்கான் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சமூகத்துக்கிடையில் ஒற்றுமையை கட்டியெழுப்புவதே அவரது விஜயத்தின் நோக்கமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொவிட் தொற்று பரவல் மற்றும் உள்நாட்டு மோதல்கள் காரணமாக ஈராக் பல்வேறு விதமான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் பாப்பரசர் ஈராக்கிற்கு விஜயம் மேற்கொள்வது தொடர்பில் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பாக்தாத் நகரில் பாப்பரசர் தலைமையில் பிரார்த்தனைளும் இடம்பெறவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.