கடந்த 24 மணித்தியாலங்களில் 855 பேர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். 38 விமான பயணங்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இடம்பெற்றுள்ள நிலையில் 2 ஆயிரத்து 429 பேர் விமான சேவையை பெற்றுள்ளனர்.
அவர்களில் 20 விமானங்களின் ஊடாக 855 பேர் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். 133 பேர் ஐக்கிய அரபு எமிர் இராச்சியத்திலிருந்தும், 81 பேர் டோஹா கட்டாரிலிருந்தும் வருகை தந்துள்ளனர். இந்நிலையில் 574 பேர் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.