திட்டமிட்ட குற்றச்செயலுடன் தொடர்புப்பட்டவரும் பாதாள உலக தலைவருமான மிதிகம சின்தக்க எனும் ஹரக் கடா என்பவரது பிரதான சகா ஆயுதங்களுடன் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.
விசேட அதிரடிப்படையின் திட்டமிட்ட குற்றச்செயல்களை ஒழிக்கும் பிரிவுக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டார். வெலிகம பொலிஸ் பிரிவின் தம்மலவத்த அஹங்கம பகுதியில் வைத்தே இவர் கைது செய்யப்பட்டார். ஒருசிலரை வாளினால் தாக்கி பாரிய காயங்களை ஏற்படுத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் இவர் தொடர்புப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவரிடம் இருந்து 22 மில்லி மீட்டர் ரக உண்டைகள் பயன்படுத்தப்படுகின்ற பிஸ்டல் வகையை சேர்ந்த கறுப்பு நிறத்திலான துப்பாக்கியும் ரி-56 ரவை பெட்டியும் ரி-56 ரக உண்டைகளும் 3 வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் பல பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன.
இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள கிருமி நாசினிகளை வேனில் எடுத்துச் சென்ற போது விசேட அதிரடிப்படையினரால் அங்குனுகொலபெலஸ்ஸ சியம்பலாகஸ்வௌ பகுதியில் கைப்பற்றப்பட்டன.
தனமல்வில தேவகிரிகந்த பகுதியில் கஞ்சா சேனையொன்று விசேட அதிரடிப்படையினரால் முற்றுகையிடப்பட்டது. பத்து பேர்ச் நிலப்பரப்பில் இந்த கஞ்சா பயிரிடப்பட்டுள்ளது.
பெரியமடு பகுதியில் அனுமதி பத்திரம் இன்றி லொறியில் மாடுகளை ஏற்றிச் சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மன்னார் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களுக்கு அமையவே இவர் கைது செய்யப்பட்டார்.