மக்கள் தொகையில் 14 மில்லியன் பேருக்கு கொவிட் 19 தடுப்பூசழயை வழங்கம் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கமைய 10 மில்லியன் எஸ்ட்ரா ஷெனேக்கா தடுப்பூசிகள் பிரித்தானிய நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்யப்படவுள்ளது.
இதற்கென 52.5 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்படவுள்ளதாக அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தடுப்பூசி விநியோக வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கைக்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.