கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியிருந்த 10 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த கொரோனா எண்ணிக்கை 445 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை முப்படையினரால் இயக்கப்படுகின்ற 96 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 9 ஆயிரத்து 373 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பொலன்னறுவை கொவிட் 19 விசேட சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்றுவந்த 32 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர். கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் அம்பாரை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு வெளியேறினர்.