போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வாகன விற்பனையில் ஈடுபட்டுவந்த சந்தேக நபரொருவர், மிரிஹான விசேட குற்றவிசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் வாகன மோசடி சம்பவங்கள் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.