அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள் சிலவற்றுக்கான விலை நாளை மறுதினம் முதல் குறைக்கப்படவுள்ளது. அரிசி, கோதுமை மா, சீனி, பருப்பு, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய், ரின்மீன், சவர்க்காரம், செனிடைஸர், முகக்கவசம் உள்ளிட்ட 27 வகை பொருட்களுக்கான விலை குறைக்கப்படுமென வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
லங்கா சதொச, கூட்டுறவு நிலையங்கள், கியு-சொப் விற்பனை நிலையங்கள் ஊடாக நிவாரணப் பொதியைக் கொள்வனவு செய்ய முடியும். இதற்கென தெரிவு செய்யப்பட்ட உள்நாட்டு உற்பத்தியாளர்கள் , நேரடி இறக்குமதியாளர்கள் ஆகியோருடன் இணைந்து நிலையான விலை மட்டத்தைப் பேணுவது தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. திட்டத்தினூடாக தரத்தில் சிறந்த அத்தியாவசியப் பொருட்களை சந்தையில் உள்ள மட்டத்தை விட குறைந்த விலைக்கு விநியோகிக்க முடியும் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.